Wednesday, July 06, 2005

 
நெஞ்சு பொறுக்குதில்லையே

மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் என்ன?
தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் யார் தலைமையில் நடை பெற்றது?
பெருந்தலைவர் என்று யாரை குறிப்பிடுகின்றோம்?
இந்தியா சுதந்திரம் அடைந்தது எந்தவருடம் எந்தமாதம் என்னதேதி?
இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?
இந்தகேள்விகளை வேருநாட்டவர்களிடம் கேட்கவில்லை,
நம்தமிழகத்து மக்களிடம் கேட்கப்பட்டது பெரும்பலோருக்கு பதில் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியை 29/6/2005 சென்னை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து நம்நாட்டு மக்களின் தேசபக்தியை வெளிச்சம் போட்டுக்காட்டினார்கள். இதில் கொடுமை என்னவென்றாள் பெரும்பாலனவர்கள் ஆசிரியர்கள் (பதில் சொன்ன ஒரு சிலரில் ஆசிரியர்களும் உண்டு) மற்றும் படித்தவர்கள். ஒரு ஆசிரியையிடம் கேட்கப்பட்டகேள்வி மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன? சிரித்துகொண்டே தெரியாது என்று கூறினார், கேள்வி கேட்ட பென்மனி,

டிச்சர் என்று சொல்கிறீர்கள் பதில் தெரியவில்லையே - அதற்கு ஆசிரியையின் பதில் நான் கணக்கு டிச்சர் என்று வெட்கமின்றி பதில் சொன்னது அதைவிடக்கொடுமை. வேலைதேடும் பட்டதாரி இளைஞகரிடம் கேட்கப்பட்டது - பதில் தெரியவில்லை. கேள்வி கேட்ட பென்மனி - வேலைக்கான இண்டர்வியுவில் இது பொன்ற கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வீர்கள் - அவரின் பதில் இப்பொழுதுதான் ஜெனரல் நாலெஜ் படித்துக்கொண்டு இருக்கிறேன். நம்தேசத்தை பத்திகூட இனிமேல்தான் படித்துதெரிந்து கொள்ளவேண்டுமாம். நம்மக்கள் பெரும்பலோருக்கு பதில் தெரியது என்ற நம்பிக்கையில் தான் சரியாக பதில் சொன்னால் பரிசு என்று அறிவித்து இருந்தார்கள்.

இந்த நிலமைக்கு காரனம் என்ன என்று சிந்தித்து பார்த்தோம் என்றால் நம்முடைய மீடியக்களாகிய சின்னத்திரை, மற்றும் பத்திரிக்கைகள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. குடியரசுதினம், சுதந்திரதினம் போன்ற நாட்களிளும் கூட திரைப்பட காட்சிகள், திரைப்பட நடிகர், நடிகைகளின் பேட்டிகள். ஏனென்றால் இவர்கள்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள். இந்திய தேசத்தை பற்றியோ, இந்திய தேசத்தின் சுதந்திரப்போராட்ட வரலாறு பற்றியோ எப்பவாவது ஒளிபரப்பு செய்து இருப்பர்களா?

எல என்ன சொல்லுதே,

படிக்கும் போது பள்ளிக்கூடத்ள சொல்லிக்குடுத்துருப்பாவல்ல.

அய்யா சின்னத்திரையின் சீரியல் சுனாமிகள் எங்க மூலையை ஆக்கிரமித்துக்கொண்டதால் படிச்சது மரந்து போச்சுங்கோ.

Comments:
நெஞ்சு பொருக்கவேண்டியதில்லை; பொறுத்தாலேபோதும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]